GuidePedia

0
மகிந்தராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து தமக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


தெவட்டகஹ ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 



தமக்கு இது குறித்து அறிவிக்கப்படாத நிலையில், முழுமையாக ஆராய்ந்த பின்னரே இது குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்று அவர் கூறினார்.



இதன் போது மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 



இதற்கு பதில் வழங்கிய அவர் அது சம்மந்தமாக பின்னர் தீர்மானிக்கப்படும் என்று கூறினார். 

Post a Comment

 
Top