GuidePedia

0
ள்ளத்தால் ஒன்றிணைந்து
உதிரம் பல சிந்தினாலும்
உண்மையாய் இருக்கையில்
உளம் பூரித்துப் போகின்றது !!

அல்லல் பல நாம் கண்டாலும்
அல்லும் - பகலும் பாடு பட்டு
அயராது பற்றிக் கொண்ட
அன்பெனும் பொக்கிசமே !

நீ எம்மை விட்டு பிரிந்தாலும்
நீண்டதொரு வெற்றியைத் தந்து
நீளாத் துயர் துடைத்த
நீயே எம் றமழானே !!

விடைபெறும் நேரமென்றால்
விண்ணில் உனக்கு வரவேற்பாம்
விருந்தளிக்கும் தருணத்தில்
விணயமாய் வேண்டுகிறோம் !!

மகிழ்வோடு கொண்டாட
மனமுவந்து தந்திடுவீர்
மகத்தான ஈதுப் பெருநாளை
மன மகிழ்ந்து கொண்டாடிடவே !!

வாழ்த்துகிறேன் உன்னை - சொல்ல
வார்தைகள் இன்றி - உளம் பூரிக்கின்றது
உன் அன்பான வருகையை எண்ணி
உறவுகள் மெய்ப்பட - உள்ளங்கள் ஒன்று பட
ஒத்து நின்று செயற்படுவோம்
உவகையோடு கொண்டாட !! கொண்டாட !!

--- சேனையூர் நவா -----

Post a Comment

 
Top