GuidePedia

0

தாயைப் போற்றி !!

Free school paragraphs: My Mother

கருவறையில் என்னை
உதிரத்தால் உயிர்ப்பித்து !!
10 மாத வேதனையின் 
விளைச்சலாய் என்னை 
ஈன்றெடுத்து !!

பாசம் எனும் பாலை ஊற்றி
அன்பு எனும் தேனை பாய்த்து
உள்ளங்களில் இனிய வார்த்தைகளை கோர்த்து 
உலகிற்கே அரும் செல்வமாய் ஊற்றெடுக்க வைத்த
என் தாயே உன்னைப் போற்றி !!

நான் புத்தக கட்டை சுமப்பதற்காக
நீ விறகுக் கட்டை சுமந்தாயே !!
உதிரத்தை உரமாக்கி 
என்னை தளைக்கும் மரமாய் 
வளர்த்தாயே !!
நீயே எழுத்தில் வர்ணிக்க முடியா கவிதை 
பொக்கிசமே !!
தாயே உன்னைப் போற்றி !!!!

Post a Comment

 
Top