முடியாதது ஒன்றுமில்லை !!
உன்னால் முடியும் என்று
எதையும் நம்பிக்கை வை
உன்னை வெல்ல யாராலும்
முயடியாது !!
நீ எப்போது அதை இழக்கின்றாயோ
அன்று நீ தோற்றுப் போகிறாய் !!
பறவைக்கு கூட என்னால்
பறக்க முடியாது என்று
எண்ணியிருந்தால்
இன்று அது பறந்திடவே முடிந்திருக்காது !!
உணர்வாய் உன் உள்ளம்
உன்னை ஊக்குவிக்கும்
மனங்கள் உனக்கு உள்ளிருந்து
கையசைக்கும் !!
எண்ணிக்கொள் இன்று நீ புதியவன் அல்ல
பழமைக்கு புதியவன் என்று !!
ஏனென்றால் உனக்குள் உதிக்கும்
இவ்வெண்ணம் உன்னைப்
புதியவனாக்கும் !!
உணர்ந்திடு புத்துணர்ச்சி பெற்றிடு !!
உன்னால் முடியாதது என்று
ஒன்றுமே இல்லை முயற்சி
செய்யும் வரை !!!
:::::::::::: சேனையூர் நவா :::::::::
Post a Comment